தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – பிரிஸ்பன்
இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக, 06-02-2021 சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவ்வகையில் பிரிஸ்பன் பெருநகரில் மதியம் 1 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு செயற்பாட்டாளர்களின் உரைகள் இடம்பெற்ற பின்னர், பேரணியாக நகர்ப்பகுதி ஊடாக நடந்து சென்று நிறைவுபெற்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed